பள்ளியில் விளையாட்டு பயிற்சி தலையில் ஈட்டி பாய்ந்து மாணவன் மூளை சாவு

வடலூர்: வடலூரில் விளையாட்டு பயிற்சியின்போது தலையில் ஈட்டி பாய்ந்து மாணவன் மூளை சாவு அடைந்தான். இதனால் மனமுடைந்த அவர் தாயார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் வடலூர் தர்மச்சாலையைச் சேர்ந்தவர் திருமுருகன் (35). இவர் நெய்வேலியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் கிஷோர் (15), மகள் பரணிக்கா (10). தனியார் பள்ளியில் முறையே 10, 5ம் வகுப்பு படித்து வருகின்றனர். கிஷோர் சிலம்ப போட்டியில் மாவட்ட, மாநில அளவில் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளான்.

கடந்த 24ம் தேதி மாலை மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. அப்போது ஈட்டி எறிதல் பயிற்சியின்போது திடீரென கிஷோரின் தலையில் ஈட்டி பாய்ந்து படுகாயம் அடைந்தான். விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றநிலையில் நேற்று மூளை சாவு அடைந்தான். இதனால் மனமுடைந்த தாய் சிவகாமி நேற்று ப்ளீச்சிங் பவுடரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். நெய்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் மாணவன் கிஷோரின் உறவினர்கள் அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

The post பள்ளியில் விளையாட்டு பயிற்சி தலையில் ஈட்டி பாய்ந்து மாணவன் மூளை சாவு appeared first on Dinakaran.

Related Stories: