கோயில் உண்டியல் மாதத்துக்கு 2 முறை திறந்து எண்ணப்படும். அதன்படி நேற்று அனைத்து உண்டியல்களும் திறக்கப்பட்டு காணிக்கை பணம் எண்ணும் பணி நேற்று நடந்தது. சமயபுரம் கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் இளங்கோவன், இணை ஆணையர் கல்யாணி, அறங்காவலர் குழு உறுப்பினர் பிச்சைமணி, சுகந்தி, லட்சுமணன் முன்னிலையில் கோயில் பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் காணிக்கை பணத்தை எண்ணினர். இதில் பக்தர்களின் காணிக்கை ரூ.92 லட்சத்து 95 ஆயிரத்து 585 ரொக்கம், 1 கிலோ 296 கிராம் தங்க நகை, 2 கிலோ 579 கிராம் வெள்ளி நகைகள், வெளிநாட்டு கரன்சிகள் 114 இருந்தது. இவை அனைத்தும் கோயில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டன.
The post சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.92.95 லட்சம் ஒரு கிலோ தங்கம் காணிக்கை appeared first on Dinakaran.