இதனிடையே பயணிகளின் வசதிக்கேற்ப மழையின் போது வழுக்கக்கூடிய சில ரயில் நிலையங்களில் உள்ள படிக்கட்டுகள் மற்றும் எஸ்கலேட்டர்கள் கூரை அமைத்து மூடப்படும். அதன்படி கோயம்பேடு, நங்கநல்லூர், அரசினர் தோட்டம், மீனம்பாக்கம், எல்ஐசி மற்றும் கிண்டி உள்ளிட்ட 6 மெட்ரோ ரயில் நிலையங்களில் மேற்கூரை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதுகுறித்து மெட்ரோ அதிகாரி கூறுகையில், ‘‘ 6 மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள படிக்கட்டுக்கள் மற்றும் எஸ்கலேட்டர்கள் மேற்கூரையின்றி திறந்த நிலையில் உள்ளது.
எனவே ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போது பயணிகளுக்கு படிக்கட்டுகள் வழுக்கும். குறிப்பாக மூத்த குடிமக்கள், குழந்தைகளுக்கு இது பாதுகாப்பின்றியே உள்ளது. கனமழை பெய்யும் போது சில நேரங்களில் தண்ணீர் கொட்டுவதால் பயணிகள் படிக்கட்டு மற்றும் எஸ்கலேட்டர்கள் பயன்படுத்த சிரமம் ஏற்படுகிறது. இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படுவதாக பயணிகளிடமிருந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து திறந்த நிலையில் உள்ள படிக்கட்டுகள் மற்றும் எஸ்கலேட்டர்களுக்கு மேற்கூரை அமைப்பதற்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்களை இறுதி செய்ய இன்னும் 4 மாதம் வரையாகும். மேலும் இந்த பணியினை முடிக்க 6 மாதங்கள் வரை ஆகலாம்,’’ என்றார்.
The post சென்னையில் 6 மெட்ரோ ரயில் நிலையங்களில் படிக்கட்டு, எஸ்கலேட்டர்களுக்கு மேற்கூரை: அதிகாரி தகவல் appeared first on Dinakaran.