தொடர்ந்து அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘ஒன்றிய அரசின் ‘இ-ஷ்ரம்’ போர்ட்டலில் பதிவு செய்யப்பட்ட (கிட்டத்தட்ட 28 கோடி பேர் பதிவு செய்துள்ளனர்) அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் மூன்று மாதங்களுக்குள் ரேஷன் கார்டுகளை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுக்கள் வழங்க வேண்டும். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு உணவு பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இ-ஷ்ரம் போர்ட்டலில் பதிவுசெய்யப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டுகளை வழங்குதல் தொடர்பாக பொது விளம்பரம் செய்ய வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்றவற்றை காரணம் காட்டி, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டுகளை மறுக்க முடியாது’ என்று உத்தரவிட்டது.
The post தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 3 மாதத்தில் ரேஷன் கார்டு: மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.