சென்னை மண்டல சுங்கத்துறை தலைமை ஆணையராக ராம்நிவாஸ் பதவி ஏற்பு

சென்னை: சென்னை மண்டல சுங்கத்துறை தலைமை ஆணையராக ராம்நிவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், நேற்று சென்னையில் பதவி ஏற்றார். 1990ம் ஆண்டு ஐஆர்எஸ் பணியில் தேர்ச்சி பெற்று ஒன்றிய அரசு பணியில் சேர்ந்தார். பொதுமக்கள் மற்றும் வணிகர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு அவர்களது குறைகளை தீர்த்து வைத்துள்ளார். பல்வேறு சிக்கலான முக்கிய வழக்குகளில் தீர்வு கண்டுள்ளார். பொதுமக்கள், வணிகர்கள் எப்போது வேண்டுமானாலும் நேரிலும், இமெயில் வாயிலாகவும் புகார் தெரிவிக்கலாம் என்று ராம் நிவாஸ் அறிவித்துள்ளார்.

The post சென்னை மண்டல சுங்கத்துறை தலைமை ஆணையராக ராம்நிவாஸ் பதவி ஏற்பு appeared first on Dinakaran.

Related Stories: