சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, குமரி, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.