இந்நிலையில், சென்னையில் இருந்து ஆந்திரா மார்க்கமாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று தொழிலாளர்கள் இருவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் ரயிலில் மோதி உயிரிழந்த பெயிண்டிங் தொழிலாளர்கள் சேகர் மற்றும் சுப்பிரமணி ஆகிய இருவரது சடலங்களை மீட்டனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
‘
மற்றொரு சம்பவம்: சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்த பிரணவ்(23), ராயபுரம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த சதீஷ்(39), சென்னையில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு, இவர்கள் இருவரும் வேலை முடிந்து, மின்சார ரயிலில் வந்து, குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளனர். அங்கிருந்து, தங்களது வீடுகளுக்கு செல்வதற்காக 2 பேரும், தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது, கொல்கத்தாவில் இருந்து தாம்பரம் ரயில் நோக்கி வந்த டின்சுக்கியா விரைவு ரயில் மோதி, 2 பேரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவறிந்த தாம்பரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரணவ், சதீஷ் ஆகியோரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
The post தண்டவாளத்தை கடக்க முயன்றபோது சோகம்; ரயில் மோதி 4 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.