ராகுல்காந்தியை இழிவாக பேசியதாக கூறி எச்.ராஜாவை கண்டித்து இன்று காங்கிரசார் ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக பாஜவின் தற்காலிக பொறுப்பாளர் எச். ராஜா, நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அமெரிக்க சுற்றுப்பயணத்தில் நிகழ்த்திய சந்திப்பை குறிப்பிட்டு மிகமிக இழிவாக பேசியதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். இந்திய நாட்டின் ஒற்றுமைக்காகவும், ஏற்றுக் கொண்ட கொள்கைகளுக்காகவும் தமது இன்னுயிரை தியாகம் செய்த இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி ஆகியோரின் வழிவந்த ராகுல்காந்தியைப் பார்த்து பேசுவதற்கு பாஜவினருக்கு எந்த தகுதியும் இல்லை. மதநல்லிணக்கத்தை சீர்குலைப்பது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் எச். ராஜாவின் பேச்சை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று (17ம்தேதி) கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். சென்னை கண்டன ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன் என்றார்.

The post ராகுல்காந்தியை இழிவாக பேசியதாக கூறி எச்.ராஜாவை கண்டித்து இன்று காங்கிரசார் ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: