அப்போது மூதாட்டி லட்சுமி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த மப்பேடு போலீசார் லட்சுமியின் உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மப்பேடு போலீசார் நடத்திய விசாரணையில், மூதாட்டியுடன் தங்கியிருந்த அசோக்குமார்தான் அவரை கொலை செய்தார் என்பது தெரிய வந்தது. அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். நகைக்காக மூதாட்டி லட்சுமியை கொலை செய்ததாக அசோக்குமார் வாக்குமூலம் அளித்ததாக மப்பேடு போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் அவரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post புதுப்பட்டு கிராமத்தில் நண்பரின் தாயாரை கொன்ற வாலிபர் கைது: நகைக்காக தீர்த்துக்கட்டியது அம்பலம் appeared first on Dinakaran.