அமைச்சர் உதயநிதிஸ்டாலின் சமுக வலைதளப் பதிவில்:
நீதிக்கட்சியின் தளகர்த்தர்களில் ஒருவர் – சென்னை மாகாண முன்னாள் முதலமைச்சர் பனகல் அரசரின் பிறந்த நாள் இன்று. தனது ஆட்சி காலத்தில், Communal GO-வை வெளியிட்டு சமூக நீதிக்கான அரணை எழுப்பியவர், மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் அவசியமில்லை என மாபெரும் கல்விப்புரட்சியை செய்தவர், அறநிலையத்துறை சட்டத்தை கொண்டு வந்து வழிபாட்டு உரிமையை காத்தவர், அரசு வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட – ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தவர்.
பனகல் அரசர் பற்றிய பள்ளிப் பாடத்தை படித்தே முத்தமிழறிஞர் கலைஞர் சுயமரியாதைபாதையை தேர்வு செய்தது வரலாறு. தமிழ்நாட்டின் பல முற்போக்கு திட்டங்களுக்கும் – சட்டங்களுக்கும் முன்னோடியாக திகழ்ந்த பனகல் அரசரின் புகழைப் போற்றுவோம். என அமைச்சர் உதயநிதி குறிப்பிட்டுள்ளார்.
The post தமிழ்நாட்டின் பல முற்போக்கு திட்டங்கள், சட்டங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த பனகல் அரசரின் புகழை போற்றுவோம்: அமைச்சர் உதயநிதி appeared first on Dinakaran.