சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 32.19% நீர் இருப்பு

சென்னை: 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர்இருப்பு 2075 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 62 மில்லியன் கனஅடியாக உள்ளது. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 292 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 32.19% நீர் இருப்பு உள்ளது.

செம்பரம்பாக்கம் – 31.82%, புழல் – 62.88%, பூண்டி – 6.44%, சோழவரம் – 5.73%, கண்ணன்கோட்டை – 58.4% நீர் இருப்பு உள்ளது.

The post சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 32.19% நீர் இருப்பு appeared first on Dinakaran.

Related Stories: