அரசியல் தலைவர்கள் இரங்கல்
ஜனாதிபதி திரவுபதி முர்மு : ரயில் விபத்தில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளதை அறிந்து வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் : ரயில் விபத்தில் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து, வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்.அடிக்கடி ரயில் விபத்துகள் நடப்பது மிகவும் கவலை அளிக்கிறது.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி : விஜயநகரம் மாவட்டத்தில் துயரத்தை தரக்கூடிய மற்றொரு ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது.தூக்க நிலையில் இருந்து ரயில்வே துறை எப்போது விழிக்கும். ரயில் மீது ரயில் மோதுவது, ரயில் பெட்டிகள் தடம் புரள்வது, பயணிகள் சிக்கிக் கொள்வது தொடர்கிறது.மிக விரைவான மீட்புப் பணி மற்றும் ரயில் விபத்து குறித்த விசாரணை தேவை.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் : எதிர்காலத்தில் இது போன்ற ரயில் விபத்துக்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை தேவை.ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, ரயில் அமைச்சகம் முன்னுரிமை அளித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
The post தொடரும் விபத்துகள்.. தூக்க நிலையில் இருந்து ரயில்வே துறை எப்போது விழிக்கும்: ஜனாதிபதி, கெஜ்ரிவால், மம்தா உள்ளிட்டோர் இரங்கல்!! appeared first on Dinakaran.