தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம்! கடைசி வரை வீரமாகப் போராடி, தேர்தல் களத்தில், ஒரு சரித்திரத்தை படைக்கும் அளவில் நாம் போட்டியிட்டு இருக்கிறோம். அனைத்து வேட்பாளர்களும் இந்த தோல்வியை படிக்கல்லாக மாற்றி வெற்றிக்கனியை பறிக்க கடுமையாக உழைத்து, 2026 நமது இலக்காக இப்பொழுதிலிருந்தே உழைத்து பெரிய வெற்றியைப் பெற வேண்டும். இந்த தேர்தலில் வாக்களித்த பொது மக்களுக்கும் இந்த கூட்டணிக்காக, உழைத்த அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முற்பகுதி திராவிட கழகத்தைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் அண்ணன் எடப்பாடி அவர்களுக்கும் அனைத்து முன்னாள் அமைச்சர் பெருமக்களுக்கும், உறுப்பினர்கள் மற்றும் இந்த கூட்டணிக்காக உழைத்த அனைவருக்குமே தேமுதிக சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். நாளை நமதே! அரசியலில் வெற்றியும் தோல்வியும் அனைவருக்கும் சகஜமான ஒன்று என்பதை ஏற்றுக்கொண்டு மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று நினைத்து அடுத்த வெற்றிக்காக நாம் தயாராவோம்,”என்று குறிப்பிட்டுள்ளார்.
The post அரசியலில் வெற்றியும் தோல்வியும் சகஜம் …மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.. பிரேமலதா அறிக்கை appeared first on Dinakaran.