தாஷ்கென்ட்: உஸ்பெகிஸ்தானில் நடந்த உஸ்செஸ் மாஸ்டர்ஸ் கோப்பை போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா (19) சாம்பியன் பட்டம் வென்றார். உஸ்பெகிஸ்தானில் நேற்று நடந்த கடைசி சுற்றுப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர் நோடிர்பெக் அப்துஸட்டோரோவ்வை, பிரக்ஞானந்தா வீழ்த்தினார். இதன் மூலம், சாம்பியன் பட்டத்தை அவர் கைப்பற்றினார்.
இந்த வெற்றியை தொடர்ந்து, உலக செஸ் தர வரிசைப் பட்டியலில் பிரக்ஞானந்தா 4வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இப்பட்டியலில், மேக்னஸ் கார்ல்சன் முதலிடத்திலும், ஹிகாரு நகமுரா, பேபியானோ கரவுனா ஆகியோர், 2 மற்றும் 3வது இடங்களிலும் உள்ளனர்.
The post உஸ்செஸ் மாஸ்டர்ஸ் கோப்பை பிரக்ஞானந்தா சாம்பியன் appeared first on Dinakaran.
