கூடலூர், பந்தலூரில் இன்று மின்தடை

 

ஊட்டி, ஏப். 24: கூடலூர், பந்தலூர் மற்றும் எருமாடு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 24ம் தேதி மின் விநியோகம் இருக்காது. மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வில்வராஜ் கூறியிருப்பதாவது,உப்பட்டி, சேரம்பாடி மற்றும் கூடலூர் துணை மின் நிலையங்களில் இன்று 24ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்றைய தினம் காலை காலை 9 மணி முதல் 5 மணி வரை மேற்கண்ட துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இதன்படி உப்பட்டி துணை மின் நிலையம்: உப்பட்டி, பொன்னானி, தேவாலா, பந்தலூர், அத்திகுன்னா, கொளப்பள்ளி, எல்லமாலா, நாடுகாணி, குந்தலாடி, ராக்வுட், அய்யன்கொல்லி, வுட்பிரேர் மற்றும் நம்பர் 3 டிவிஷன் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

சேரம்பாடி துணை மின் நிலையம்: சேரம்பாடி டவுன், கன்னம்வயல், நாயக்கன்சோலை, கையுன்னி, எருமாடு, தாளூர், பொன்னச்சேரர், கக்குண்டி, சோலாடி ஆகிய பகுதிகள். கூடலூர் துணை மின் நிலையம்: கூடலூர், நந்தட்டி, சூண்டி, மரப்பாலம், செம்பாலா, ஓவேலி, 1வது மைல், 2வது மைல், காந்தி நகர், முதுமலை, அத்திபள்ளி, தொரப்பள்ளி, பாடான்தொரை, ஸ்ரீமதுரை, மண்வயல், தெப்பக்காடு, பாட்டவயல், நெலக்கோட்டை, கார்குடி, தேவர்சோலை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வில்வராஜ் தெரிவித்துள்ளார்.

The post கூடலூர், பந்தலூரில் இன்று மின்தடை appeared first on Dinakaran.

Related Stories: