காவல்துறை இணையதளத்தில் குறிப்பிட்ட வழக்கில் தனிநபர் ஒருவரின் பெயரை நீக்க ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: காவல்துறை இணையதளத்தில் குறிப்பிட்ட வழக்கில் தனிநபர் ஒருவரின் பெயரை நீக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. குற்ற வழக்கில் tnpolice.gov.in-ல் மனுதாரரின் பெயரை 2 வாரத்தில் நீக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட வழக்கில் tnpolice.gov.in-ல் இருந்து தன் பெயரை நீக்க உத்தரவிடக் கோரி தஞ்சையை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். குற்ற வழக்குகளில் இருந்து அனைத்து ஆவணங்களிலும் மனுதாரரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. tnpolice.gov.in-ல் மட்டும் மனுதாரரின் பெயரை ஏன் நீக்கவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது. மனுதாரரின் பெயரை நீக்கிய பின், அது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

The post காவல்துறை இணையதளத்தில் குறிப்பிட்ட வழக்கில் தனிநபர் ஒருவரின் பெயரை நீக்க ஐகோர்ட் கிளை உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: