இந்நிலையில், ஒரக்காட்டுப்பேட்டை கிராமத்தில் ஒதுக்கீடு செய்த வீட்டுமனையில் நரிகுறவர்யின குடும்பங்கள் வீடு கட்ட சென்றபோது, ஊராட்சி மன்ற நிர்வாகம், ஊர் மக்கள் வீடு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த நரிக்குறவர்கள், இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் பட்டா வழங்கி ஓராண்டு ஆகியநிலையில், தங்களுக்கு வழங்கிய வீட்டுமனையில் வீடு கட்ட அனுமதிக்க வேண்டும் அல்லது மாற்று ஏற்பாடாவது செய்துத்தர வேண்டும் என நரிக்குறவர் பெண் ஹரிதாஸ் மனைவி அம்மு, தனது கைக்குழந்தையுடன் நேற்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்து மக்கள் குறைதீர்க்கும் நடைபெறும் கூட்டம் அரங்கிற்கு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை அழைத்துக்கொண்டு கலெக்டரும் சென்று கோரிக்கையை நேரடியாக தெரிவித்தனர். அப்போது, கலெக்டர் கலைச்செல்வி மோகன், இக்கோரிக்கையின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதேபோல, வாலாஜாபாத் அருகே உள்ள கீழ் ஒட்டிவாக்கம் கிராமத்தை சேர்ந்த 5 குடும்பங்களுக்கு பட்டா வழங்கியும் தற்போது அதில் நீர்நிலை புறம்போக்கு என்று கூறி பட்டாவை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகமும், பட்டாவையும் வீட்டுமனையும் பகரிக்க நினைக்கிறது என்று 5 பெண்கள் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.
The post அரசு வழங்கிய பட்டாவில் வீடு கட்ட அனுமதி கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நரிகுறவர்கள் appeared first on Dinakaran.