இதையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால், திமுகவை சேர்ந்த டி.ஆர்.பாலு, பாஜவின் அனுராக் தாக்கூர், ரவிசங்கர் பிரசாத், தேஜஸ்வி சூர்யா, திரிணாமுல் கட்சியின் சவுகதா ரே, சமாஜ்வாடி கட்சியின் தர்மேந்திர யாதவ் ஆகியோர் உட்பட 15 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதேபோல், எஸ்சி, எஸ்டி நலன் தொடர்பான குழு,ஆதாயம் தரும் பதவி தொடர்பான கூட்டுக் குழு, இதர பிற்படுத்தப்பட்டோர் நலக் குழு ஆகியவையும் போட்டியின்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களுக்கான தலைவர்களை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா விரைவில் பரிந்துரைப்பார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post முக்கிய நாடாளுமன்ற குழுக்களுக்கு போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு appeared first on Dinakaran.
