இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் பேட்மிண்டனில் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, எஸ்டோனியாவின் கிறிஸ்டின் குபா உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பி.வி.சிந்து வெற்றி பெற்றார். 21-5, 21-10 என்ற நேர் செட் கணக்கில் (2-0 செட் கணக்கில்) எஸ்தோனியாவை வீழ்த்தினார். பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறினார். ரவுண்ட் ஆப் 16 சுற்றில் பி.வி.சிந்து, சீனாவின் ஹி பிங் ஜியாவோவை எதிர்கொள்கிறார்.
The post பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து காலிறுதி முந்தைய சுற்றுக்கு தகுதி..!! appeared first on Dinakaran.