லெபனானில் வாக்கி டாக்கி வெடித்து 3 பேர் பலி

பெய்ரூத்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வாக்கி டாக்கிகள் அடுத்தடுத்து வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர். ஈரான் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களை குறிவைத்து தாக்குதல் என தகவல் வெளியாகியுள்ளது. வாக்கி டாக்கிகளை தொடர்ந்து தொலைபேசிகளும் வெடித்துச் சிதறியதாக கூறப்படுகிறது. நேற்று பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறியதில் 12 பேர் பலியான நிலையில் தற்போது வாக்கி டாக்கி வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post லெபனானில் வாக்கி டாக்கி வெடித்து 3 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: