இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதை பார்த்த மனைவி தனலட்சுமி அலறினார். அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் 4 மர்ம நபர்களும் தப்பி சென்று விட்டனர். இதையடுத்து சிவசங்கரை கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து தப்பி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு சிவசங்கரின் தம்பி ஆட்டோ டிரைவர் பிரபு தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The post பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.