தற்போதைய பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, அதை மீட்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், சட்டமன்றத்தில் தொடர்ந்து இதுதொடர்பாக வலியுறுத்தி வந்தார். இந்நிலையில், நீதிமன்ற தீர்ப்பில் நிலம் அரசுக்கு சொந்தமானது என உறுதியானதை தொடர்ந்து அந்த நிலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்ட திட்டமிட்டு மொத்தம் உள்ள 12,800 சதுர அடி கொண்ட நிலத்தில் 1750 சதுர அடியில் ஆறு பேருந்துகள் நிற்கும்படி பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நேற்று பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 39வது வார்டு திருமலை நகர், முதல் பிரதான சாலையில் மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ், ரூ.3.40 கோடி மதிப்பீட்டில் 1.075 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டு வரும் புதிய மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் சரஸ்வதி நகர் பகுதியில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் பாதாள சாக்கடை விரிவாக்க பணிகளை எம்எல்ஏ இ.கருணாநிதி ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்கவும், அதே பகுதியில் உள்ள பூங்காவின் விரிவாக்க பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, பகுதி செயலாளர் ஏ.கே.கருணாகரன், திமுக நிர்வாகிகள் க.ரமேஷ், எம்.இளவரசன், லோ.டில்லிபாபு, மாநகராட்சி மாநகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.
The post பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் ரூ.4.35 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்: எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.