இதனால் கூட்டணி ஆட்சி தவிர்க்க முடியாததாகி உள்ளது. நவாஸ் மற்றும் பிபிபி கட்சிகள் கடந்த 2 நாட்களாக நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அதே சமயம் நவாஸ் கட்சி சுயேச்சைகளை வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதுவரை 10 சுயேச்சைகள் தங்களுக்கு ஆதரவு தந்துள்ளதாகவும் இதனால் கட்சியின் பலம் 85 ஆக அதிகரித்துள்ளதால் பாகிஸ்தானின் 4வது பிரதமராக நவாஸ் ஷெரீப் பதவியேற்பார் என அவரது சகோதரரும் முன்னாள் பிரதமருமான ஷெபாஸ் ஷெரீப் நேற்று செய்தியாளர்கள் கூட்டத்தில் நம்பிக்கை தெரிவித்தார்.
அதே சமயம், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான் செய்தி சேனலுக்கு நேற்று அளித்த பேட்டியில், ’’பிஎம்எல்-என், பிபிபி, எம்க்யூஎம் ஆகிய கட்சிகளுடன் எந்த பேச்சுவார்த்தையும் இருக்காது. இந்த 3 கட்சிகளை தவிர்த்து மற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை பிடிஐ மேற்கொண்டுள்ளது. இதற்காக உயர்மட்ட உத்தி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது’’ என்றார். பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டப்படி, நாடாளுமன்ற தேர்தல் முடிந்த 3 வாரத்திற்குள் நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும். அதன்படி பார்த்தால் வரும் 29ம் தேதிக்குள் ஆட்சி அமைக்க ஏதேனும் ஒரு கட்சி தயாராக வேண்டும்.
The post பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு; நவாஸ், இம்ரான் கான் கட்சிகள் ஆட்சி அமைக்க தீவிர முயற்சி appeared first on Dinakaran.