இவர்கள் 4 பேரும் மருத்துவத்திற்காக நெல்லை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றபோது பச்சநல்லூர் மேம்பாலம் அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியை முந்த முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் லாரியின் சக்கரத்தில் மாட்டியதில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த பச்சநல்லூர் போலீசார் 4 பேரின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post நெல்லை அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.