ஊருணியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வடுகபட்டியை சேர்ந்தவர்கள் பாண்டி மகன் தென்றல் (11), ரமேஷ் மகன் சவுந்தரபாண்டியன் (11). இருவரும் அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை அங்குள்ள கட்டையன் ஊருணியில் குளிக்கச் சென்றனர்.

நீண்ட நேரமாகியும் திரும்பாததால் பெற்றோர், உறவினர்கள் தேடினர். அப்போது ஊருணியில் மூழ்கி இரு சிறுவர்களும் இறந்தது தெரிய வந்தது. அவர்களின் உடல்களை மீட்டு, பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுடன் மேலும் 2 சிறுவர்கள் சென்றதாக தகவல் பரவியதால்,போலீசார், தீயணைப்பு படையினர் ஊருணியில் இறங்கி தேடினர். இறுதியில் அது தவறான தகவல் என தெரிந்தது.

The post ஊருணியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி appeared first on Dinakaran.

Related Stories: