திட்டம் தொடங்கப்பட்ட முதல்நாளிலேயே ஏராளமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. உடனுக்குடன் அனுமதி வழங்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் வீடு கட்ட தொடங்கிய பிறகுகூட விண்ணப்பித்து அனுமதி பெறலாம். அதில் ஒரே நிபந்தனை உரிய விதிமுறைகளின்படி கட்டப்பட வேண்டும் என்பதுதான். ஆன்லைன் திட்டத்திற்கு கட்டணம் அதிகமாக உள்ளதாக கூறுவது தவறு. முன்பு பல தலைப்புகளில் கட்டணம் செலுத்தி வந்த நிலையில், தற்போது ஒரே தலைப்பின் கீழ் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால் கூடுதலாக தெரிகிறது. ஆனாலும் பொதுமக்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
The post ஆன்லைன் திட்டத்துக்கு அமோக வரவேற்பு வீடு கட்ட தொடங்கிய பிறகும்கூட விண்ணப்பித்து அனுமதி பெறலாம்: அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி appeared first on Dinakaran.