இந்த நிலையில் மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனிருத்தா போஸ், சஞ்சய் குமார் மற்றும் எஸ்.வி.என்.பட்டி ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர்மனுதாரரான ஆன்லைன் நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி,‘‘தமிழ்நாடு அரசு ஆன் லைன் விளையாட்டுக்கு தடை செய்யும் விதமாக புதிய சட்டத்தை இயற்றி உள்ளது. எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,” இந்த விவகாரத்தில் இடைக்கால தடையோ அல்லது உத்தரவோ பிறப்பிக்க முடியாது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என தெரிவித்து விசாரணையை வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
The post ஆன்லைன் விளையாட்டுக்கு எதிரான தமிழ்நாடு அரசு சட்டத்துக்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.