இந்நிலையில், நேற்று அருணாச்சலத்தை சந்திக்க வந்தவாசி பழைய பஸ் நிலையம் வந்த காஞ்சிபுரம் பல்லவன் நகரை சேர்ந்த நாகராஜன்(44) என்பவரை, டிஎஸ்பி கங்காதரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலு, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமு, முருகன் மற்றும் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்து விசாரித்தனர். இதில் சைக்கிள் கடை தொழிலாளியான நாகராஜன் காஞ்சிபுரம் பகுதியில் ஆன்லைன் சூதாட்ட ஏஜென்டாக செயல்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை கைது செய்து, வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 500க்கும் மேற்பட்ட முகவர்களுடன் செயல்படும் ஆன்லைன் சூதாட்ட கும்பல்களை சேர்ந்தவர்கள் அருணாச்சலம் செல்போன் எண்ணில் அதிக தொடர்புடையவர்களை கண்டறிந்து விசாரணை வளையத்தில் கொண்டு வர போலீசார் முடிவு செய்துள்ளனர்.
The post ஆன்லைன் சூதாட்ட வழக்கில் காஞ்சிபுரம் ஏஜென்ட் கைது appeared first on Dinakaran.