தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.75 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1.28 லட்சம் கனஅடியாக இருந்து நீர்வரத்து 1.75 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் பரிசல் இயக்கவும், சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் தடைவிதித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.