நர்சை எரித்து கொன்றது ஏன்? கணவர் பரபரப்பு வாக்குமூலம்

நெல்லை: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி அய்யம்மாள் (45), நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். கடந்த 4ம் தேதி இரவு பணி முடிந்து கணவருடன் பைக்கில் பாளை. அண்ணா நகரில் உள்ள வீட்டுக்கு திரும்பி வந்தபோது, தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது நடுவழியில் பைக்கை நிறுத்தி, அய்யம்மாளை கத்தியால் குத்தியதோடு, அவரது தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொலை செய்துவிட்டு கணவர் தப்பியோடி விட்டார்.

இந்நிலையில் கோவில்பட்டி கிழக்கு போலீசில் சரணடைந்த அவரை பாளை ஐகிரவுண்ட் போலீசார் கைது செய்து நெல்லைக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அவர் போலீசில் அளித்த வாக்குமூலம்: திருமணம் ஆனதில் இருந்து எனக்கும், அய்யம்மாளுக்கும் தகராறு இருந்து வந்தது. வேலைக்கு போக வசதியாக இருக்கும் என்பதால் நெல்லை அரசு மருத்துவமனை அருகே பாளை. அண்ணா நகரில் 3 குழந்தைகளோடு வந்து அய்யம்மாள் வீடு எடுத்து தங்கினார். வெளிநாட்டில் இருந்து வந்த நான். பாளை அண்ணாநகர் வீட்டை காலி செய்து விட்டு, கோவில்பட்டிக்கு வருமாறு வலியுறுத்தினேன். ஆனால் அவர் கேட்கவில்லை. எனக்கு சற்று மனநிலை பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் மனநல டாக்டரிடம் சிகிச்சை பெற்று வந்தேன். கோவில்பட்டிக்கு அழைத்துச் செல்ல அவரை மனம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டேன். ஆனால் அவர் என்னை இங்கு வந்து தங்குமாறு கூறினார். நேற்று (4ம் தேதி) பணி முடிந்து வந்த அய்யம்மாளை அழைத்துக் கொண்டு பைக்கில் பாளை அண்ணாநகருக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது எனக்கும், அய்யம்மாளுக்கும் திடீரென தகராறு ஏற்பட்டதால் கொலை செய்தேன். பின்னர் கோவில்பட்டி சென்று கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் சரண் அடைந்தேன். போலீசார் என்னை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

The post நர்சை எரித்து கொன்றது ஏன்? கணவர் பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.

Related Stories: