ஆப் ரேஷன் மிட் நைட் ஹேமார் என்ற பெயரிலான தங்களின் தாக்குதல் மூலம் ஈரானின் அணுஆயுத தயாரிப்பு திட்டத்துக்கு பேர் அழிவு ஏற்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா தாக்குதல் நடத்திய சில மணி நேரத்திலேயே இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவியது. இதில் 86 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கட்டடங்கள், வீடுகள் பலத்த சேதம் அடைந்துள்ளன. அமெரிக்கா மீதும் ஈரான் பதில் தாக்குதல் நடத்தும் என்று அந்நாட்டு அதிபர் மசூத் பேசஸ்கியான் அறிவித்துள்ளார். அனைத்து விதமான சிவப்பு எல்லைகளையும் அமெரிக்கா கடந்து விட்டதாக குற்றம்சாட்டி உள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் ஆளுமை எங்கள் மீதான தாக்குதலின் விளைவுகளுக்கு அமெரிக்காவே பொறுப்பு என்று கூறியுள்ளார்.
ரஷ்யாவின் உதவியை நாட மாஸ்கோ சென்றுள்ள அவர் அங்கு இன்றுஅதிபர் புட்டினை சந்தித்து உதவி கோரா உள்ளார். பதற்றம் அதிகரிப்பதால் ஐநா வின் பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் இந்திய நேரப்படி இன்று கூட்டப்பட உள்ளது. அமெரிக்காவின் நேரடி தாக்குதல் தொடராமல் இருக்க உச்சத்தலைவர் ஆயுத்துள்ளா பதவி விலக வேண்டும் என்று ஈரானிய எதிர்க்கட்சி தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். ஆனால் அமெரிக்காவின் தாக்குதலால் யுரேனியம் செறிவூட்டலுக்கு பாதிப்பு இல்லை என்று கேமோரியன் ஆலோசகர் அறிவித்துள்ளார். இதற்கிடையே பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய ஈரான் அதிபர் மசூத் எஸ்.எஸ்.கியா போர் நிலவரம் குறித்து விலகியதாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் கூறியுள்ளது.
The post அணு சக்தி மையங்கள் மீதான துல்லிய தாக்குதல் பற்றி அமெரிக்கா விளக்கம்..!! appeared first on Dinakaran.
