நியூயார்க்கில் புகழ் பெற்ற இந்து கோயில் மீது தாக்குதல்

நியூயார்க்: அமெரிக்காவில் நியூயார்க்கின் ராபின்ஸ்வில்லி நகரில் புகழ் பெற்ற சுவாமி நாராயணன் கோயில் அமைந்துள்ளது. இது அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய இந்து கோயில் என்றும், உலகின் 2வது மிகப்பெரிய கோயில் என்ற சிறப்பையும் உடையது. இந்த கோயிலை மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தி உள்ளனர். கோயிலுக்கு வௌியே உள்ள சாலைகள் வெடிபொருள்களால் தகர்க்கப்பட்டுள்ளன. மேலும் சில இந்து வெறுப்பு வாசகங்களும் எழுதப்பட்டுள்ளன. இதற்கு அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய தூதரகம் எக்ஸ் பதிவில், “இதுபோன்ற செயல்களை ஏற்க முடியாது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு அமெரிக்காவில் உள்ள அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

The post நியூயார்க்கில் புகழ் பெற்ற இந்து கோயில் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: