ஆர்.எஸ்.மங்கலம், ஜன.24: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது. ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் சனவேலி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் பள்ளியின் தலைமை ஆசிரியர் பகவதி குமார் தலைமையில் நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கண்ணைய்யா முன்னிலை வகுத்தார். பள்ளியின் முதுகலை ஆசிரியர் தங்கப்பாண்டியன் அணைவரையும் வரவேற்று பேசினார். இக்கூட்டத்தில் நடப்பு மற்று எதிர்வரும் கல்வி ஆண்டில் பள்ளியின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும். அதற்கு ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எவ்வாறு ஒத்துழைக்க வேண்டும். எதிர்வரும் அரசு பொது தேர்வுகளில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும்.
வரும் கல்வி ஆண்டில் இப்பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் அதிகளவில் நமது பள்ளியில் சேர்க்க வேண்டும். இவற்றிக்கு எல்லாம் மேலாக நமது பள்ளி மாணவ, மாணவிகள் ஒழுக்கம் நிறைந்தவர்களாக உருவாக்க வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் பெற்றோர்களும் முழுமையாக ஒத்துழைத்து மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். அனைவரும் இணைந்து பள்ளி வளர்ச்சிக்கு மனதார பாடுபட வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாணவ, மாணவிகள், இருபால ஆசிரியப் பெருமக்கள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆசிரியை மெஸியானந்தி நன்றி கூறினார்.