×

சாயல்குடி-அருப்புக்கோட்டை இடையே உயிர்பலி வாங்க காத்திருக்கும் சாலையோர ஆபத்தான கிணறு

சாயல்குடி, டிச.17: சாயல்குடியில் இருந்து கீரந்தை வழியாக அருப்புக்கோட்டை செல்லும் சாலையோரம் உள்ள கிணறு திறந்தவெளியில் உள்ளது. இதனால் விபத்து ஏற்பட்டு உயிர்பலி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாயல்குடியிலிருந்து இருவேலி, எஸ்.கீரந்தை விலக்கு ரோடு வழியாக அருப்புக்கோட்டை மற்றும் கோவிலாங்குளம் வழியாக கமுதி செல்ல பிரதான சாலை உள்ளது. இதன் வழியே பஸ், கனரக வாகனங்கள், இருசக்கர வாகனம் என தினந்தோறும் வந்து செல்கிறது.

எஸ்.கீரந்தை பேருந்து நிறுத்தம் எதிரே செல்லும் சாலையின் ஓரம் திறந்தவெளி கிணறு ஒன்று உள்ளது. தரையை ஒட்டி, சாலை உயரத்திற்கு சமதள பரப்பில், வளைவு பகுதியில் கீழ்புறம் கிணறு அமைந்துள்ளது. சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழும் அபாயம் உள்ளது.

இந்த பகுதியில் சாலை அபாயகரமான வளைவு இருந்தும் கூட முன்ெனச்சரிக்கை அறிவிப்பு பலகைகள், வேகத்தடை மற்றும் இரும்பிலான தடுப்பு வேலிகளை நெடுஞ்சாலை துறையினர் வைக்கவில்லை. இதனால் இப்பகுதியில் தினந்தோறும் சிறு, சிறு விபத்துகள் நடந்து வருகிறது. இதுபோல் பேருந்து நிறுத்தத்திற்கு பஸ் ஏற வரும் பள்ளி மாணவர்கள் விளையாடும் போது தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே பெரும் விபத்து நடக்கும் முன் எஸ்.கீரந்தை சாலையோரம் உள்ள திறந்தவெளி கிணற்றை மூடியும், தடுப்புவேலிகள் மற்றும் முன்னெச்சரிக்கை அறிவிப்பு பலகைகளை அமைக்க மாநில நெடுஞ்சாலை துறையினர் முன்வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : well ,Sialkudy-Aruppukkottai ,
× RELATED சென்னை சவுகார்பேட்டையில் ஓபியம் போதைப்பொருள் வைத்திருந்த 3 பேர் கைது