×

திருவாடானை நீதிமன்றத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம்

திருவாடானை, நவ. 22:  திருவாடானை நீதிமன்றத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசா
யம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் வழங்கப்பட்டது.
திருவாடானையில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றத்தின் வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணி நீதிபதி பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது.
இதில் நீதிமன்றத்திற்கு வரும் வழக்காடிகள்
மற்றும் பொதுமக்கள்
ஆகியோருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் நீதிமன்ற ஊழியர்கள் வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Quake ,public ,court ,Thiruvananthapuram ,
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு: எஸ்ஐடி விசாரணை கோரி வழக்கு