×

7 மாதத்துக்கு பிறகு படப்பிடிப்பில் நயன்தாரா

ஏழு மாதங்களுக்கு பிறகு படப்பிடிப்புக்கு திரும்பினார் நடிகை நயன்தாரா. கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் மார்ச் மாதம் 19ம் தேதியிலிருந்து நிறுத்தப்பட்டது. கடந்த மாதம் படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி வழங்கியது. ஆனாலும் பல நடிகர், நடிகைகள் உடனே படப்பிடிப்புக்கு திரும்பவில்லை. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில் மலையாள படத்தில் நடிக்க நேற்று முன்தினம் கொச்சிக்கு வந்தார் நயன்தாரா.

மலையாள படமொன்றில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபனுடன் 12 வருடங்களுக்கு பின்னர் இந்த படத்தில் நயன்தாரா மீண்டும் இணைந்து நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கொச்சியில் ஆரம்பமானது. இதில் நயன்தாரா கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது. குஞ்சாக்கோ போபன் மற்றும் நயன்தாரா கடற்கரை அருகில் நின்று கொண்டிருப்பது போலவும் அருகில் படக்குழுவினர் நிற்பது போலவும் அந்த புகைப்படத்தில் உள்ளது. இந்த படத்தை அப்பு என் பட்டாத்திரி இயக்கி வருகிறார்.

Tags : Nayanthara ,filming ,
× RELATED நயன்தாரா தயாரித்த ‘கூழாங்கல்’ படத்துக்கு விருது