×

ஹீரோவாக நடிக்க மறுத்தது ஏன்? - சூரி

வெற்றிமாறன் இயக்கத்தில் முதல்முறையாக ஹீரோவாக நடிக்கிறார், சூரி. அதே நேரம் காமெடி வேடத்திலும் நடித்து வரும் அவர், இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: சில வருடங்களுக்கு முன்பே சில இயக்குனர்கள் என்னை ஹீரோவாக நடிக்க வைக்க கேட்டனர். ‘என் காமெடி வண்டி நல்லாத்தானே ஓடிக்கிட்டிருக்கு. இப்ப எதுக்கு நான் ஹீரோவா நடிக்கணும்?’ என்று  சொன்னேன்.

திடீரென்று டைரக்டர் வெற்றிமாறன் அழைத்து ஒன்லைன் சொன்னார். இந்த படத்தை பொறுத்தவரை, நான் ஹீரோ கிடையாது. வெற்றிமாறனும் அவர் சொன்ன கதையும்தான் ஹீரோ. அந்த கதையில் நான் ஒரு பகுதியாக இருக்கிறேன். அவ்வளவுதான். வரும் 27ம் தேதி நம்ம வீட்டுப் பிள்ளை திரைக்கு வருகிறது. சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் சகோதரராக நடிக்கிறேன்.

அக்டோபர் 4ம் தேதி விஜய் சேதுபதியுடன் நடித்த சங்கத்தமிழன் ரிலீசாகிறது. இதில் கதைப்படி நான்தான் ஹீரோ. விஜய் சேதுபதி காமெடி  செய்வார். அது எப்படி என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். அடுத்து கொம்பு வெச்ச சிங்கம்டா, சர்பத் உள்பட 10க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி  வேடத்தில் நடிக்கிறேன். காமெடி செய்வது மட்டும்தான் என் குறிக்கோள்.

Tags : hero ,Suri ,
× RELATED பதினோரு விநாயகர்களின் பரவச தரிசனம்