×

25,000 மரக்கன்றுகள் நடும் நடிகர்

சென்னை: தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. மண்ணுக்கும் மக்களுக்கும் என்ற சமூகநல அறக்கட்டளையை தொடங்கி, நடத்தி வருகிறார். அதன்படி நடிகர் சௌந்தரராஜா தனது மண்ணுக்கும் மக்களுக்கும் சமூகநல அறக்கட்டளை மூலம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகளை நட்டு, வளர்க்க திட்டமிட்டுள்ளார்.
சென்னை ஆவடியில் உள்ள காவல் துறை கன்வென்ஷன் சென்டரில் நடந்த மண்ணுக்கும் மக்களுக்கும் சமூகநல அறக்கட்டளையின் ஒன்பதாவது ஆண்டு விழாவில் இதற்கான அறிவிப்பை நடிகர் சௌந்தரராஜா வெளியிட்டார். கடந்த 9 ஆண்டுகளில் 45,000 மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகின்றனர். இந்த அமைப்பினர், தமிழ்நாடு முழுக்க கண்மாய்கள், நீர்நிலைகளை சுற்றி பனை மரங்களை நடுவது, நாட்டு மரங்களை நடுவதும் அதை பாதுகாத்து வளர்த்தும் வருகின்றனர். மேலும், இயற்கை மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு முன்னெடுப்புகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர்.

Tags : Chennai ,Soundararaja ,Mannukmu Zhakkaram ,Tamil Nadu ,Mannukmu Zhakkaram Social Welfare Foundation ,Police Convention Center ,Avadi, Chennai ,
× RELATED மலையாள சினிமாவில் தாக்கம் ஏற்படுத்திய நடிகர் ஸ்ரீனிவாசன் மரணம்