×

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் இறுதி போட்டியில் காந்த் தோல்வி: சீன வீரர் சாம்பியன்

கோலாலம்பூர்: மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் இறுதிப் போட்டியில் சீன வீரரிடம் இந்திய நட்சத்திர வீரர் கிடாம்பி காந்த் தோல்வியை தழுவினார். மலேசியாவில் மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வந்தன. மகளிர் பிரிவில் பி.வி.சிந்து உள்ளிட்டோரும், ஆடவர் பிரிவு போட்டிகளில் ஆயுஷ் ஷெட்டி, ரஜாவத் உள்ளிட்ட வீரர்களும் தோல்வியை தழுவி வெளியேறிய நிலையில், இந்தியாவின் நட்சத்திர வீரர் கிடாம்பி காந்த் இறுதிப் போட்டி வரை முன்னேறினார். இந்நிலையில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் சீன வீரர் லீ ஷிபெங் உடன் காந்த் மோதினார். துவக்கம் முதல் துடிப்புடன் செயல்பட்ட சீன வீரர், 21-11, 21-9 என்ற நேர் செட்களில் காந்தை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

 

The post மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் இறுதி போட்டியில் காந்த் தோல்வி: சீன வீரர் சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Kant ,Malaysia Masters badminton final ,Kuala Lumpur ,Kidambi Kant ,Malaysia Masters badminton ,Malaysia ,P.V. ,Sindhu ,Ayush ,Dinakaran ,
× RELATED வெ.இ.க்கு எதிரான 3வது டெஸ்டில்: வெற்றி...