பவானி: அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் செல்லியாண்டியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 18ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடுகள் நடைபெற்று வந்தன. கடந்த 31ம் தேதி கரகம் மற்றும் பூவோடு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு குண்டம் கண் திறத்தல், முப்போடு அழைத்தல், குதிரை துலுக்குதல் நிகழ்ச்சிகள் நடந்தது. காவிரி ஆற்றிலிருந்து நேற்று அம்மன் அழைத்து வரப்பட்டதை தொடர்ந்து, கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் பூசாரி இறங்கினார். தொடர்ந்து, ஆண்கள், பெண்கள் என ஏராளமான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி, நேர்த்திக்கடனை செலுத்தினர். அம்மனுக்கு பொங்கல் வைத்து, படையலிட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
The post ஊமாரெட்டியூர் செல்லியாண்டியம்மன் கோயில் குண்டம் திருவிழா appeared first on Dinakaran.
