சித்தூர் : சித்தூர் துர்கா நகரில் குப்பைகளை அகற்றவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சித்தூர் துர்கா நகர் காலனி பகுதியில் உள்ள ஐயப்ப சுவாமி கோயில் எதிரே கடந்த ஒரு வாரமாக குப்பை கழிவுகளை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அகற்றாததால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் துர்நாற்றத்தால் அவதிப்பட்டு வருகிறார்கள். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
நாள்தோறும் எங்கள் பகுதியில் உள்ள வீடுகளில் சேகரிக்கும் குப்பை கழிவுகளை துர்கா நகர் பகுதிக்கு செல்லும் வழியில் ஐயப்ப சுவாமி கோயில் எதிரே குப்பை கழிவுகளை கொட்டி செல்கிறார்கள். நாள்தோறும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பை கழிவுகளை அகற்றி வந்தார்கள்.
ஆனால் கடந்த ஒரு வாரமாக மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பை கழிவுகளை அகற்றாததால் துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதியில் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சித்தூர் துர்கா நகரில் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.
