×

குழந்தையை வீட்டில் வைத்து பூட்டி விட்டு இளம்பெண் மாயம்

ஊத்தங்கரை, பிப்.18: ஊத்தங்கரை அடுத்த சின்னகுன்னத்தூர் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் மனைவி நமீதா (21). விஸ்வநாதன் கேரளாவில் தங்கி வேலை செய்து வருகிறார். இதனால் நமீதா குழந்தையுடன், மாமனார் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 13ம் தேதி மதியம், நமீதா குழந்தையை வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டு வெளியேசென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து விஸ்வநாதன் ஊத்தங்கரை போலீசில் புகாரளித்தார். அதன் பேரில், இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகிறார்.

The post குழந்தையை வீட்டில் வைத்து பூட்டி விட்டு இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.

Tags : Uthankarai ,Viswanathan ,Namitha ,Chinnakunnathur ,Kerala ,
× RELATED ஓய்வூதியர் தின விழா