×
Saravana Stores

பாப்பிரெட்டிப்பட்டி அருகே தொழிலாளியை தாக்கிய தம்பதி மீது வழக்கு

பாப்பிரெட்டிப்பட்டி, அக்.15: பாப்பிரெட்டிப்பட்டி அருகே கல்லாத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாது(66), கூலி தொழிலாளி. இவருக்கும், இவரது தம்பி கோவிந்தராஜூக்கும், நீண்ட நாட்களாக தகராறு உள்ளது. கடந்த 8ம் தேதி இவரது தாய் உடல்நிலை குறைவால் இறந்துவிட்டார். அப்போது கோவிந்தராஜ் வீட்டில் இருந்த அவரது தாயின் உடலை, தனது வீட்டிற்கு எடுத்து செல்வதாக மாது கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட வாய் தகராறில் கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவி சுசீலா ஆகிய இருவரும், அருகில் இருந்த கட்டை மற்றும் கையால் சரமாரியாக மாதுவை தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து பள்ளிப்பட்டி போலீசார் கோவிந்தராஜ், அவரது மனைவி சுசிலா ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர். .

The post பாப்பிரெட்டிப்பட்டி அருகே தொழிலாளியை தாக்கிய தம்பதி மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Papriprettipatti ,Paprirettipatti ,Mathu ,Kallathupatti ,Govindaraj ,
× RELATED திருடிய வாலிபர் கைது