×

தொழுவூர் ஓம்சக்தி எல்லையம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த தொழுவூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஓம்சக்தி மாரியம்மன் என்ற ஓம் சக்தி எல்லையம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதத்தில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, அம்மன் வீதி உலா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு ஆடித்திருவிழா தொடங்கி நடந்தது. விழாவை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து, பொங்கல் வைத்து, கூழ்வார்த்து அம்மனை வழிபாடு செய்தனர்.

8ம் நாளான்று இரவு சப்த கன்னிகளான 7 அம்மன்கள் சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி திருவிழா நேற்று நடந்தது. தொழுவூர், தண்ணீர்குளம், காக்களூர், செவ்வாப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அம்மன் வீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை ஆதின அய்யா முதலியார் குழுவினர் செய்திருந்தனர்.

The post தொழுவூர் ஓம்சக்தி எல்லையம்மன் கோயிலில் தீமிதி திருவிழா appeared first on Dinakaran.

Tags : Dimithi Festival ,Thoshavur Omshakti Behanayamman Temple ,Thiruvallur ,Toshuvur ,Om Shakti Mariyamman Temple ,Thosvuur Omshakti Behanayamman Temple ,
× RELATED மோகனூர் அருகே கோயிலில் தீமிதி விழா கோலாகலம்