×

இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்

 

திருப்பூர், ஜூலை 26: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் இன்று (26ம் தேதி) காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் வளாகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைக்கான மனுக்களை வழங்கிடவும், பின்னர் பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில் ஒரு சங்கத்திற்கு ஒருவர் வீதம், தங்களது கோரிக்கைகளை தொகுத்து நேரடியாக தெரிவித்திடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைத்திட விவசாயிகளுக்கு ஏதுவாக வேளாண்மை அலுவலர், தோட்டக்கலை அலுவலர் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களைக் கொண்டு வேளாண் உதவி மையம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
வேளாண் உதவி மையத்தின் மூலம் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான தகவல்கள் வழங்கப்படும். தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்து கொள்ளவும், வேளாண் உழவர் நலத்துறை மற்றும் வேளாண் சார்ந்த துறைகளால் அமைக்கப்படவுள்ள கருத்துக்காட்சியிலும் கலந்து கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

The post இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Tirupur District Collector ,Kristhraj ,Tirupur district ,
× RELATED நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டிய சுங்கச்சாவடியை அகற்ற ஆணை