×

திருப்பதியில் 24 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வாரவிடுமுறை நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் 75,916 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 42,920 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று முன்தினம் இரவு எண்ணப்பட்டது. இதில் ஒரே நாளில் ரூ.3.87 கோடி காணிக்கை செலுத்தி இருந்தனர்.

வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பி, டிபிஎசி பகுதி வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் காத்திருந்தனர். இவர்கள் 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணிநேரத்தில் தரிசனம் செய்தனர்.

The post திருப்பதியில் 24 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Swami ,Tirupati ,Tirumala ,Tirupati Eyumalayan temple ,
× RELATED கொரோனா காலக்கட்டத்தில்...