×

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக வழக்கை ஜூலை 18-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக வழக்கை ஜூலை 18-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ நிலை அறிக்கை தாக்கல் செய்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீட் முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் 36 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மே மாதம் நடந்த நீட் தேர்வில் பல முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நீட் தேர்வு முறைகேடு குறித்து விசாரிக்கக் கோரியும் மறுதேர்வு நடத்தக் கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரிக்கப்படுகிறது.

The post நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக வழக்கை ஜூலை 18-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,CBI ,Dinakaran ,
× RELATED ஒரு வழக்கில் ஒருவர் கைதாகிறார்...