×

சுரைக்காய் வரத்து அதிகரிப்பு

திருப்பூர், ஜூலை 7: திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தென்னம்பாளையம் சந்தைக்கு நாள்தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். இங்கிருந்து மொத்தமாகவும், சில்லறையாகவும் வியாபாரிகள் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். நேற்று தென்னம்பாளையம் சந்தைக்கு திருப்பூர் மாவட்டத்தின் அவிநாசி, உடுமலை, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், கோவையின் கருமத்தம்பட்டி, சோமனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சுரைக்காய் விற்பனைக்காக அதிக அளவு கொண்டுவரப்பட்டிருந்தது. வரத்து அதிக அளவு இருந்ததன் காரணமாக விலை குறைந்து 20 கிலோ எடை கொண்ட சுரைக்காய் பை ஒன்று 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

The post சுரைக்காய் வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Thennampalayam Market ,Palladam Road, Tirupur ,Dinakaran ,
× RELATED விபத்தில் சிக்கி உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.23.85 லட்சம் நிதியுதவி