×

அடையாளம் தெரியாத முதியவர் ரயிலில் அடிபட்டு பலி

திருச்சி, ஜூன் 6: திருச்சி பொன்மலை ரயில் நிலைய தண்டவாளம் அருகே 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே எஸ்.எஸ்.ஐ பாலமுருகன் மற்றும் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இறந்தவரின் அடையாளம் சுமாா்60 வயது மதிக்கதக்கவர், உயரம்:155 செ.மீ, இடது மார்பின் மேல் மச்சம் உள்ளது, வௌ்ளை நிற பச்சை அரைக்கை சட்டை, நீல நிற கைலி, மஞ்சள் நிற துண்டு அணிந்துள்ளார், மேலும் இவரை பற்றி தகவல் தெரிந்தால் இருப்புப்பாதை காவல் நிலைய எண்ணிற்கு 9942522477 தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

The post அடையாளம் தெரியாத முதியவர் ரயிலில் அடிபட்டு பலி appeared first on Dinakaran.

Tags : Trichy ,Thandavalam ,Trichy Ponmalai railway station ,SSI Balamurugan ,Dinakaran ,
× RELATED திருச்சி-திண்டுக்கல் சாலையில் போலீஸ் வாகனம்-ஆட்டோ மோதல்