×

மாயமான டிரைவர் கிணற்றில் சடலமாக மீட்பு

ஓமலூர்: ஓமலூர் அருகே வெள்ளாளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன்(28). இவரது மனைவி பூமிகா. இவர்களுக்கு தேஜாஸ்ரீ(4) என்ற மகள் உள்ளார். வேல்முருகன், கருப்பூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். குடியரசு தினத்தன்று வெளியில் சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து உறவினர்கள் கருப்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இந்நிலையில், வெள்ளாளப்பட்டி அருகே, கிராம பொது கிணற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக கருப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். சேலம் மாநகர உதவி போலீஸ் கமிஷனர் நிலவழகனும் நேரடி விசாரணை நடத்தினார். இதில், கிணற்றில் சடலமாக மிதப்பது காணாமல் போன வேல்முருகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, சடலத்தை கயிறு கட்டி மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, கிணற்றில் தவறி விழுந்து வேல்முருகன் இறந்தாரா, குடும்ப பிரச்னையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் அடித்து கொலை செய்து, உடலை கிணற்றில் வீசி சென்றனரா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

The post மாயமான டிரைவர் கிணற்றில் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Omalur ,Velmurugan ,Velalapatti ,Bhumika ,Tejashree ,Karuppur ,Republic Day ,
× RELATED ஓமலூர் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் வரத்து குறைந்த நிலையில் விற்பனை சரிவு!!